கார்ப்பரேட் மேலாண்மைப் பாடங்கள்
பாடம் - 1
**************
ஒரு காகம் ஒரு மரத்தின் கிளையில், ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருந்தது. அந்த வழியாக வந்த சிறுமுயல் ஒன்று காகத்தைப் பார்த்து, "நானும் உன்னைப் போலவே ஒரு வேலையும் செய்யாமல் ஒய்வெடுக்கலாமா ?" என்றது, அதற்கு காகம், "ஓ, தாராளமாகச் செய்யலாமே !" என்று பதிலுரைத்தது ! சிறுமுயலும் மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கியது. அங்கு திடீரென்று தோன்றிய நரி, முயல் மீது பாய்ந்து அதை கொன்று தின்று விட்டது !!!
நீதி: ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டுமென்றால், நீங்கள் மிக உயரத்தில் அமர்ந்திருத்தலே நலம் !!!
பாடம் - 2
**************
ஒரு கோழியும், எருதும் உரையாடிக் கொண்டிருந்தன.
கோழி: எனக்கு அந்த மரத்தின் உச்சிக்கு செல்ல ஆசை. ஆனால், அதற்கு வேண்டிய உடற்திடம் என்னிடம் இல்லை !
எருது: என்னுடைய சாணத்தை கொஞ்சம் தின்று பார் ! ஏனெனில், அதில் பல சத்துக்கள் உள்ளன.
முதல் நாள் கொஞ்சம் சாணத்தை உண்ட கோழிக்கு மரத்தின் முதல் கிளை வரை ஏற முடிந்தது. அடுத்த நாள் கோழி இன்னும் சிறிது சாணம் தின்று இரண்டாவது கிளை வரை ஏறியது. இது போல் சிறிது சிறிதாக சாணம் தின்று, பத்து நாட்களில், கோழி மரத்தின் உச்சிக்கு ஏறி, மிக்க பெருமையுடன் அமர்ந்திருந்தது !!! அந்த வழியாக வந்த குடியானவன் ஒருவன், மரத்தின் உச்சியில் இருந்த கோழியைக் கண்டவுடன், உணவுக்காக அதை சுட்டு வீழ்த்தினான் !!!
நீதி: எருதுச்சாணம் (BULLSHIT) உங்களை உயரத்திற்கு இட்டுச் செல்லலாம் ! ஆனால், உயரத்திலேயே நிலை கொள்வதற்கு அது ஒருபோதும் உதவாது !!!
"உயரத்திற்குச் செல்ல விரும்பாத"
என்றென்றும் அன்புடன்
பாலா
3 மறுமொழிகள்:
உங்கள் புதுமொழிகளை தமிழ்த் துணைப் பாடத்துக்கு பரிந்துரைக்கலாம் போலிருக்கே? வருங்கால வரலாற்றில் `பாலாமொழிகள்'பதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது!!!!
Bala,
You could have given the source of these stories.Its proper to give credit to the source to avoid plagarism.
Anonymous,
I agree. But I do not know the source. I receive stuff like this by mail from friends. I translate stuff that I feel are good and publish.
Also, I am seeing thanu's comments only now :-(
Post a Comment